Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. இதுகுறித்து, மல்லசமுத்திரம் கிளைமேலாளர் கணேசன் தெரிவித்ததாவது:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த பருத்தி ஏலத்தில் 70 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6319 முதல் 7365 வரையிலும், பி.டி.,ரகம் ரூ.6410 முதல் ரூ.7329 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4640 முதல் ரூ.5240 வரையிலும் என மொத்தம் ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
அடுத்த ஏலம் வருகிற 29 ஆம்தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.